இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பஞ்சாப் மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. முதலில களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது. பின்னர் 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து தோல்வி அணைந்தது. இதனால் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

#INDvSL 2_வது ஒருநாள் போட்டி: 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி


இந்நிலையில் நேற்றைய போட்டியில் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு ரசிகர் தடுப்புச் சுவரை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்து அவர் டோனியின் காலை தொட்டு வணங்கினார். 



இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு வீரர் விரைவாக வந்து அந்த ரசிகரை அழைத்துச் சென்றார்.