#INDvSL 2_வது ஒருநாள் போட்டி: 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Last Updated : Dec 13, 2017, 07:30 PM IST
#INDvSL 2_வது ஒருநாள் போட்டி: 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி title=

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்ய அழைந்தனர்.

தனது ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. 115 ரன்னுக்கு தான் இந்தியாவின் முதல் விக்கெட் வீழ்ந்தது. ஷிகார் தவான் 68(67) ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து ஷிரியாஸ் ஐயர் இருவரும் நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  

ஷிரியாஸ் ஐயர் 50(50) தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். 2_வது ஒரு நாள் போட்டி விளையாடும் ஷிரியாஸ் ஐயர் தனது முதல் அரை சதத்தை இலங்கைக்கு எதிராக அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஷிரியாஸ் ஐயர் 88(70) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 9 பவுண்டரியும் 2 சிச்சரும் அடித்தார். 

பின்னர் வந்த முன்னால் கேப்டன் எம்.எஸ் தோனி 7(5) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஹார்திக் பாண்டியா அதிரடியா ஆடினார்கள். கடைசியா ரோஹித் ஷர்மா தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இது இவரது மூன்றாவது இரட்டை சதமாகும். கடைசி வரை 208(153) ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஹார்திக் பாண்டியா 8(5) ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட் ஆனார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் திசரா பெரேரா தலா 3 விக்கெட்டும், சச்சித் பதிராணா தல ஒரு விக்கெட்டும் எடுத்தார்கள்.

இலங்கை அணி வெற்றி பெற 393 ரன்கள் தேவை என்ற நிலையில் தனது ஆட்டத்தை தொடங்கியது. இலங்கை அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 17-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

இந்திய தரப்பில் யூசுவெந்திர சஹால் 3 விக்கெட்டும், ஜாஸ்பிரட் பும்ரா 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தார்கள்.

 

 

Trending News