மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றிய பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொண்டது. டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒரு நாள் போட்டிகள் அணியின் கேப்டர்னாக ஷாய் ஹோப் பொறுப்பேற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறத் தவறியபோது கேப்டனாக ஹோப் ஏமாற்றத்தை எதிர்கொண்டார். 


முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச முடிவெடுத்தார். ரோஹித்தின் முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் கொண்டு வரப்பட்டவுடன், கென்சிங்டன் ஓவல் விக்கெட்டின் உண்மை முகம் வெளிப்பட்டது.


வெஸ்ட் இண்டீஸ் 15.4 ஓவரில் 88/3 என்ற நிலையில் இருந்து 23 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேற்கிந்திய தீவுகள்  கேப்டன் ஷாய் ஹோப் 45 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


ரவீந்திர ஜடேஜா (3 விக்கெட்), குல்தீப் யாதவ் (4 விக்கெட்) ஆகியோரின் முயற்சியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தோல்வியே பரிசாகக் கிடைத்தது. 114 ரன்களுக்கு ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் இந்திய அணிக்கு வெற்றியை எளிதாக கொடுத்துவிடவில்லை.


மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தேதி மாற்றம்...? பிரச்னை இதுதான்!


ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் திறந்து கைல் மேயர்ஸை 2 ரன்களில் வெளியேற்றினார். பின்னர் அலிக் அதானாஸ் (22) மற்றும் பிராண்டன் கிங் (17) இடையே ஒரு சிறிய கூட்டாண்மை உருவானது, ஆனால் அவர்களை முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் வீழ்த்தினார்கள்.


ஜடேஜா 6 ஓவர்களில் 3/37 எடுத்தார், குல்தீப் யாதவ் 3 ஓவர்களில் 4/6 எடுத்தார், வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவர்களில் 114 ரன்களுக்குச் சுருண்டது.


5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 115 ரன்களை சேஸ் செய்த இந்தியா, மாற்றப்பட்ட பேட்டிங் ஆர்டருடன் போராடியே வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்கள் வழக்கமான நிலைகளில் விளையாட வரவில்லை, ஏனெனில் இந்தியா, குறைந்த வரிசை பேட்டர்களை முதலில் விளையாட அனுமதித்தது.


இஷான் கிஷான் அரை சதம் அடித்தார், அவரைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்தியா 17.2 ஓவர்களில் 97/5 என்று இருந்தது, அந்த நேரத்தில் ரோஹித் சர்மா இறுதியாக பேட்டிங் செய்ய வெளியேறினார். ரோஹித் இறுதியாக நம்பர் 7 இல் நுழைந்தார், இந்திய கேப்டன் வெற்றிகரமான ரன்களை அடித்தபோது கோஹ்லியும் இணைய, முடிவில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ரோகித் சர்மாவை ஆச்சரியப்படுத்திய கென்சிங்டன் விக்கெட்
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, கென்சிங்டன் ஓவலில் விக்கெட்டில் இருந்து ஒரு பெரிய திருப்பத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தார், “உண்மையைச் சொல்வதானால்,ஆடுகளம் இப்படி மோசமடையும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அது அனைவருக்கும் ஏதாவது இருந்தது. ஆனால் 114 என்ற குறைவான ஸ்கோர்களில் அவர்களை கட்டுப்படுத்துவோம் என்று நினைக்கவே இல்லை’ என்று ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.


ரோஹித் சர்மா 7-வது இடத்தில் பேட்டிங் செய்தார், அதே நேரத்தில் விராட் கோலிக்கு முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங் வரிசையில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க அணி நிர்வாகம் முடிவு செய்தது, பேட்டிங் வரிசையில் மாற்றம் குறித்து பேசிய இந்திய கேப்டன், “ஆண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம், நாங்கள் 5 விக்கெட்டுகளை இழப்போம் என்று நினைக்கவில்லை, ஆனால் அது ஒரு இப்போது வந்து சில வாரங்களில் அதிக நேரம் கிடைக்காத பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க நல்ல வாய்ப்பு என்று தெரிவித்தார்.


அறிமுக வீரர் முகேஷ் குமாருக்கு பாராட்டு கிடைத்தது. அலிக் அதானாஸ் தனது பந்துவீச்சில் கட் ஷாட் ஆட முயற்சித்ததால் அவர் தனது முதல் ஒருநாள் விக்கெட்டைப் பெற்றார். அவரை ரவீந்திர ஜடேஜாவிடம் முகேஷ் கேட்ச் செய்தார். முகேஷைப் பாராட்டிய கேப்டன் ரோஹித், “முகேஷ் புத்திசாலித்தனமாக இருக்கிறார். டெஸ்டில் கூட, அவர் பந்தை ஸ்விங் செய்வார், அவருக்கு கொஞ்சம் வேகம் உள்ளது மற்றும் அவர் மிகவும் சீரானவர். எனவே அவர் என்ன வழங்குகிறார் என்பதைப் பார்க்க விரும்புகிறோம்’ என்று ரோஹித் ஷர்மா தெரிவித்திருந்தார். கடந்த வாரம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முகேஷ் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.


முதல் ஒருநாள் போட்டியில் 3 ஓவர்களில் 4/6 என்ற அபார பந்துவீச்சிற்காக குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். குல்தீப் தனது 3 ஓவர்களில் 2 மெய்டன்களை வீசினார். 3வது இடத்தில் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 19 ரன்கள் எடுத்தார்.


ஜூலை 27, 2023 அன்று பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகளின் முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷன் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.


2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தயார்நிலையை இந்தத் தொடர் மீண்டும் தொடங்கியது. 


மேலும் படிக்க | எலைட் வீரர்களை சஸ்பெண்ட் செய்த ஐசிசி! அபராதம் கட்டிய கிரிக்கெட்டர்கள் பட்டியல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ