எலைட் வீரர்களை சஸ்பெண்ட் செய்த ஐசிசி! அபராதம் கட்டிய கிரிக்கெட்டர்கள் பட்டியல்

ICC Suspension List: ஐசிசி இந்த எலைட் கிரிக்கெட் வீரர்களுக்கு இடைநீக்கம் மற்றும் கடுமையான அபராதம் விதித்துள்ளது

ஐசிசி நடத்தை விதிகளின்படி, சட்டத்தை மீறினால், தவறு செய்யும் வீரருக்கு அதிக அபராதம் விதிக்கப்படும். 

1 /8

ஐசிசி நடத்தை விதிகளை மீறுவதன் மூலம் வீரர்கள் அடிக்கடி நிதானத்தை இழந்து தாங்களே சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். 

2 /8

அதில் அண்மைச் சம்பவம் ஹர்ப்ரீத் கவுர் இரண்டு நாட்களுக்கு சஸ்பெண்ட் மற்றும் போட்டித் தொகையில் அபராதம்... இந்திய வீரர்கள் தங்கள் அமைதியை இழந்து கடுமையாக தண்டிக்கப்படும் சில நிகழ்வுகள் இங்கே.

3 /8

இந்திய வீரர்கள் தங்கள் அமைதியை இழந்து கடுமையாக தண்டிக்கப்படும் சில நிகழ்வுகளில், தோனியின் சஸ்பெண்ட் முக்கியமானது. ஜூன் 2015 இல் இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான போட்டியில், MS தோனிக்கும் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கும் இடையில் தள்ளுமுள்ளு நடந்ததால் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது

4 /8

கோபக்கார விராட் கோலி இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது ஆச்சரியமளிக்க ஒன்றுமில்லை. 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, மைதான பார்வையாளர்கள் பலர் கோஹ்லியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் நடந்தது. கோபத்தில், கோஹ்லி பார்வையாளர்களை நோக்கி அசிங்கமாய் நடுவிரலை காட்டியதற்கு ஐசிசி நடவடிக்கை எடுத்தது

5 /8

உயரமான இந்திய பந்துவீச்சாளரும் சில இலங்கை ஹிட்டர்களும் ஒருமுறை சண்டையிட்டனர். இஷாந்த் சர்மா ஒரு டெஸ்ட் போட்டியின் போது இலங்கை பேட்ஸ்மேன் ஒருவரைப் பார்த்து கத்தியதோடு விக்கெட் கீப்பர் தினேஷ் சண்டிமாலுடன் சண்டையிட்டார். ஷர்மாவுக்கு போட்டித் தொகையில் 65% அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

6 /8

பிரவின் ஆம்ரே, மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோர் தண்டனை பெற்று பெரும் அபராதம் செலுத்தும் போது, ரிஷப் பந்த்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 2022ல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பந்த், பயிற்சியாளர் பிரவின் ஆம்ரே மற்றும் தாக்கூர் ஆகியோர் கள நடுவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

7 /8

நடத்தை விதிகளை மீறியதற்காக 2 போட்டிகளில் இடைநீக்கம் செய்யப்பட்டார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

8 /8

ஹர்மன்ப்ரீத் கவுர் முதல் எம்எஸ் தோனி வரை பலருக்கு ஐசிசி இடைநீக்கம் மற்றும் கடுமையான அபராதம் விதித்துள்ளது