ஆசிய கோப்பை கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி, ஏற்கனவே விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று, பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி, மக்காவ் அணியை எதிர்கொண்டது. அதில்  இந்திய அணி இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


இந்த வெற்றியை தொடர்ந்து 2019-ம் ஆண்டு துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 


இந்திய அணி ஆசிய கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவது இது 4-வது முறையாகும். முன்னதாக கடந்த 1964, 1984 மற்றும் 2011-ம் ஆண்டுகள் நடைபெற்ற போட்டிகளுக்கு இந்திய அணி தகுதி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.