19:36 26-04-2019
இன்று இரவு 8 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றது. பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




19:34 26-04-2019
இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மோத உள்ளது. ஆனால் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி ஆடவில்லை



சென்னை: IPL 2019 தொடரின் 44-வது லீக் ஆட்டம் இன்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.


IPL 2019 லீக் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் வெற்றிப்பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணியும், ஆறு போட்டியில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றனர்.


ஏற்கனவே நடந்த முடிந்த 15-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்று அசத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையடக்கூடும். உள்ளூரில் ஆடுவது சென்னை அணிக்கு ரசிகர்களின் ஆதரவும், கூடுதல் உத்வேகம் கிடைக்கும். புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும்.


அதேவேளையில் மும்பை அணிக்கு பின்னால் இருக்கும் அணிகள் அடுத்தடுத்து வெற்றி பெற்றால் மும்பை அணிக்கு சிக்கல் ஏற்ப்படக்கூடும். மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை வெற்றி பெற்றால் அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு செல்ல தடை இருக்காது.


நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மோத உள்ளதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இரு அணிகளும் போதும் போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.