வங்காள தேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து, காயம் காரணமாக மேத்யூஸ் விலகியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை, வங்காள தேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வங்காள தேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைப்பெறவிறுக்கிறது.


இந்நிலையில் முத்தரப்பு ஒருநாள் போட்டியின்போது மேத்யூஸ்-க்கு காயம் ஏற்பட்டதால், சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. 


இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 8-ஆம் தேதி டாக்காவில் நடைபெறுகிறது. இதுவரையில் மேத்யூஸின் காயம் குணமடையாத காரணத்தால் இரண்டாவது டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் அவர் விளையாடமாட்டார் இலங்கை அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் மார்ச் 8 ஆம் தேதி இலங்கையில் தொடங்கவுள்ள இலங்கை, இந்தியா, வங்காள தேசம் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது நடைபெற்று வரும் தொடரில் இலங்கை அணியின் கேப்டனாக திசாரா பேரேரா செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது!