புதுதில்லி: நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3-2 வித்யாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களில் ஒருவர் தான் எம் எஸ் தோனி. ஒரு நாள் தொடரில் வென்றதன் மூலம் கேப்டன் தோனி பாராட்டுகள் பெற்று வருகிறார்.


இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து அணியை வென்றதன் மூலம் வெற்றி கேப்டனாக தோனி உள்ளார். கடந்த 2014ல் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார் மேலும் 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பையிலும் தோனிபங்கேற்று விளையாட வேண்டும் என்று ஆஷிஷ் நெஹ்ரா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். இதனால் 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை தோனி விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.