பூஜார மற்றும் ரஹானே ஆகியோரின் சதத்தினால் இந்திய தனது இரண்டாவது டெஸ்டில் 344 ரன்கள் எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டியில் இன்று காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 


துவக்க ஆடகரர்களாக தவான் மற்றும் கே. எல். ராகுல் களமிறங்கினர். ஆட்டம் துவங்கியது முதல் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர். பின் 10.1 வது ஓவரில் தவான் 35(37) பெரேரா பந்தில் லேல்.பி.டபள்யூ மூலம் வெளியறினர். பின் களமிறங்கிய விரெட் கொஹ்லி 13(29) ரன்களுக்கு ஹேரத் பந்தில் கேட்ச் அவுட் ஆனார். கே.எல்.ராகுல் 57(82) ரன்களில் வெளியேறினர்.


அதன் பின் களமிறங்கிய ரஹானே புஜரவுடன் கை கோர்க்க அணியின் எண்ணிக்கை உயர தொடங்கியது. 


தற்போதய நிலவரப்படி இந்திய அணி. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்துள்ளது.


பூஜாரா 128(225) மற்றும் ரஹானே 103(168) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.