15 ஆண்டுகளாக உலகின் தலை சிறந்த கிரிக்கட் வீரராக விளங்கிய இலங்கை அணியின் குமார் சங்ககாரா சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

134 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சங்ககாரா, 12400 ரன்களை எடுத்துள்ளார்.


சங்ககாரா தலைமையிலான ஒரு நாள் போட்டிக்கான இலங்கை அணி 2007, 2011-ம் ஆண்டுகளில் இறுதி போட்டி வரை சென்றது. ஓய்வை அடுத்து சங்ககாரா உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாடி வந்தார். 


இந்நிலையில், செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள தொடர் உடன் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சங்ககாரா அறிவித்துள்ளார்.