இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 50 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டீகாக் 124 ரன்கள் விளாசி அவுட்டானார். வான்டர் டசன் 52 ரன்கள் எடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கே.எல். ராகுல் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி!


பின்னர், 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முக்கியமான விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்து தடுமாற்றத்துக்குள்ளானது. சிறப்பாக விளையாடிய தவான் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 84 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 64வது அரைசதம் இதுவாகும். 



இந்நிலையில் கோலி விளையாடியதை அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா, மகள் வாமிகாவுடன் கேலரியில் இருந்தவாறு கண்டுகளித்தார். அரைசதம் அடித்தவுடன் மகிழ்ச்சியில் இருந்த கோலி, உடனே தனது மனைவி மற்றும் மகளை நோக்கி பேட்டை உயர்த்தினார். பின்னர், பேட்டை தனது கையால் ஏந்தி, தாலாட்டு பாடுவதுபோல் சைகை செய்து, இந்த அரைசதத்தை மகளுக்கு பரிசளித்தார். இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது. மேலும், விராட்கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி தங்களின் மகளை முதன்முறையாக பொதுவெளியில் காட்டியுள்ளனர். 


ALSO READ | ருதுராஜ் கைக்வாட்-டை தொடர்ந்து புறக்கணித்து வரும் இந்திய அணி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR