WTC Final: இங்கிலாந்தில் இந்தியா நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி துவங்கியது. சற்று முன்பு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி  முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட WTC இறுதிப் போட்டியின் (WTC Final)  முதல் நாள் ஆட்டம் நடக்காமல் போனது. இன்றும் லேசான மழைக்கான கணிப்புகள் உள்ளன. எனினும், டாஸ் போடும் நேரத்தில் மழை இல்லாமல் இருந்ததால், டாஸ் போடப்பட்டு போட்டி துவங்கவுள்ளது. வானிலை முன்னறிவிப்பின்படி, சனிக்கிழமை வெப்பநிலை 18-20 டிகிரி அளவைக் கொண்டிருக்கும், ஈரப்பதம் 80 ஆக இருக்கும்.


ரிசர்வ் நாள்


ஐந்து நாட்களுக்குள் டெஸ்ட் போட்டி விளையாடப்படும் முழு நேரமும் விளையாட கிடைக்காவிட்டால் மட்டுமே ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும். போட்டியில் மழை குறுக்கிட்டால், சூழல் சரியாக இருக்கும்போதெல்லாம், அதிக ஓவர்கள் போடப்பட்டு, முதலில் நிர்ணயிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் போட்டியை முடிக்கவே முன்னுரிமை அளிக்கப்படும். போடப்படவேண்டிய ஓவர்கள் முடிந்துவிட்டால், ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படாது, போட்டி யாருக்கும் வெற்றியின்றி டிராவில் முடிவடையும். அந்த நிலையில் இரு அணிகளும் இணை வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு பரிசுத் தொகை பணம் சமமாக பிரித்துக்கொடுக்கப்படும். 


ALSO READ: WTC Final டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை அவுட் செய்த மழை


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளின் வீரர்கள் விவரம்: 


இந்திய அணி: விராட் கோலி (Virat Kohli) (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, சுப்மான் கில், சேதெஷ்வர் புஜாரா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி, ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, விக்கெட் கீப்பர் உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.


நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் ப்ளண்டெல், ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, கொலின் டி கிராண்ட்ஹோம், மாட் ஹென்றி, கைல் ஜேமீசன், டாம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், நீல் வாக்னர், பி.ஜே. வாட்லிங், வில் இளம்


முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சனிக்கிழமை (ஜூன் 19) ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஒரு செய்தியை வழங்கினார். ஆம்!! நேற்று மழை காரணமாக, இந்தியா நியூசிலாந்து இடையில் நடக்கவிருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மிகவும் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இன்றாவது மழை இல்லாமல் இருக்குமா என சிந்தித்து காத்திருந்தார்கள். 


ALSO READ: WTC Final,Ind vs NZ: வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு?


ரசிகர்களின் எண்ணத்தை கணித்த தினேஷ் கார்த்தி, இன்று காலை ரசிகர்கள் பார்க்க விரும்பிய காட்சியை பகிர்ந்துகொண்டார். சவுத்தாம்ப்டனின் ஏகாஸ் பவுல் நல்ல வெயிலுடன் பிரகாசமாக உள்ளது. கிரிக்கெட் போட்டியின் (Cricket Match) ஒளிபரப்பு பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் தினேஷ் கார்த்திக், ட்விட்டரில் சூரியன் வெளியேறிக்கொண்டிருக்கும் படத்தை பகிர்ந்தார். 


கார்த்திக் இந்த படத்தை பகிர்ந்து, "சூரியன் எழுகிறது" என்று தலைப்பிட்டார்.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR