தமிழகம் மற்றும் புதுச்சேரியில் SSLC பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 14ம் தேதி SSLC பொதுத்தேர்வுகள் துவங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 3,731 தேர்வு மையங்களில் 9.97 லட்சம் மாணவர்கள் எழுதி வரும் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.  


இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் முதல் வாரத்தில் விடைத்தாள் திருத்தம் பணிகள் தொடங்கப்படுகிறது. இதன் பிறகு, ஏப்ரல் 29ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மேலும், 11ம் மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியது.