சென்னையில் 1,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 3,680 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 3,680 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 3,636 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 44 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 3,680 பேரில் சென்னையில் மட்டும் 1,205 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 74,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் 101 ஆய்வகங்கள் (அரசு - 53 மற்றும் தனியார் - 48) உள்ளன. அதில், இன்று மட்டும் 37,309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 15,29,092 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில்,  2,196 பேர் ஆண்கள். 1,484 பேர் பெண்கள்.மொத்தமாக 79,482 ஆண்களும், 50,657 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 22 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இன்று மட்டும் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக உள்ளது.




READ | கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு..!


தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 64 பேர் உயிரிழந்தனர். அதில், 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 47 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,829 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,483 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ளவர்களில் 6,442 பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 1,08,035 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15,784 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்.... 


சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,205 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 74,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 219 பேருக்கும், விருதுநகரில் 143 பேருக்கும், மதுரையில் 192 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 80 பேருக்கும், தூத்துக்குடியில் 195 பேருக்கும், செங்கல்பட்டில் 242 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


இன்று சென்னையில் 27 பேரும், மதுரையில் 6 பேரும், ராமநாதபுரத்தில் 4 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், கோவை மற்றும் தேனியில் தலா 3 பெரும், திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை,காஞ்சீபுரத்தில் தலா இருவரும், விருதுநகர், விழுப்புரம், திருவாரூர், ஈரோடு, நாகபட்டினத்தில் தலா ஒருவரும்  கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.