தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,778 லிருந்து 66,571 ஆக உயர்வு..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 3,783 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 44 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 3,827 பேரில் சென்னையில் மட்டும் 1,747 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 70,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் 95 ஆய்வகங்கள் (அரசு - 49 மற்றும் தனியார் - 46) உள்ளன. அதில், இன்று மட்டும் 34,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 13 லட்சத்து 76 ஆயிரத்து 497 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,285 பேர் ஆண்கள், 1,542 பேர் பெண்கள். கொரோனா வைரஸ் பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 70,370 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 44,586 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 3,793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 571 ஆக உள்ளது.




தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா வைரஸ் பாதித்த 61 பேர் உயிரிழந்தனர். அதில், 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,571 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,833 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 5,668 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 95 ஆயிரத்து 390 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13 ஆயிரத்து 920 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


READ | இந்திய மருந்துகள் மீது பரிசோதனை செய்ய உலக சுகாதார நிறுவனம் தடை விதிப்பு..!


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்.... 


இன்று சென்னையில் 1,747 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 70,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 245 பேருக்கும், செங்கல்பட்டில் 213 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 182 பேருக்கும், திருவள்ளூரில் 175 பேருக்கும், தேனியில் 119 பேருக்கும், தூத்துக்குடியில் 109 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


இன்று சென்னையில் 30 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் தலா 3 பேரும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் என 61 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.