தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60,592 லிருந்து 62,778 ஆக உயர்வு..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 4,077 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 73 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 4,150 பேரில் சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 66,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் 95 ஆய்வகங்கள் (அரசு - 49 மற்றும் தனியார் - 46) உள்ளன. அதில், இன்று மட்டும் 34,831 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில்,  2,481 பேர் ஆண்கள், 1,669 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 68,085 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 43,044 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 62,778 ஆக உள்ளது.




தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 60 பேர் உயிரிழந்தனர். அதில், 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,510 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 44,956 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 5,489 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 92 ஆயிரத்து 248 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13 ஆயிரத்து 414 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


READ | உள்நாட்டு செயலியை மேம்படுத்தவும், புதிய செயலிகளை வடிவமைக்கவும் அரசு புதிய திட்டம்..!


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்.... 


இன்று சென்னையில் 1,713 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 68,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 308 பேருக்கும், செங்கல்பட்டில் 274 பேருக்கும், திருவள்ளூரில் 209 பேருக்கும், வேலூரில் 179 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும், திருவண்ணாமலையில் 141 பேருக்கும், விருதுநகரில் 113 பேருக்கும், விழுப்புரத்தில் 109 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


சென்னையில், 21 பேரும், திருவள்ளூரில் 10 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், மதுரையில் 5 பேரும், காஞ்சிபுரம், சிவகங்கையில் தலா 3 பேரும், தேனியில் 2 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, விருதுநகரில் தலா ஒருவரும் என 60 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.