3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் 109 அடியை எட்டி உள்ள நிலையில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டாக்டர் சரோஜா, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செம்மலை உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.


சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 109 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,04,436 கன அடியில் இருந்து 1,01,277 கன அடியாக குறைந்தது. நீர் இருப்பு 76.99 டி.எம்.சி., குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.