சென்னை கலைவானர் அரங்கில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக - இளைஞர் அணி மருத்துவ மற்றும் மாணவர் அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் - இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார் - மேலும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியது போல கண்டிப்பாக கட்சி பாகுபாடு இன்றி அனைவரையும் அழைத்து ஒன்றுபட்டு நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் அனைவரும் சமம் அனைவரும் என்று சீருடைகளை வழங்கி பள்ளிக்கு செல்லுங்கள் என வலியுறுத்தும் திராவிட  மாடாலாக நம் மாடல் உள்ளது என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ...


மேலும் படிக்க | 5 ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள்: ஸ்மிருதி இரானி அறிவிப்பு


இந்த கையெழுத்து இயக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி : 


இட ஒதுக்கீடாக இருந்தாலும் இந்தி எதிர்ப்பாக இருந்தாலும் ஜல்லிக்கட்டு போராட்டமாக இருந்தாலும் நமது தமிழ்நாடு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதில் எப்பொழுதும் முதல் குரல் கொடுக்கும்


கடந்த மாதம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமாக இருந்தாலும் சரி கையெழுத்து இயக்கமாக இருந்தாலும் சரி அது சார்ந்த சட்ட போராட்டத்திலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கும் போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.


இந்தியா கூட்டணி வெற்றிபெறும் போது 15 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர முடியும்,எல்லா வீட்டிற்கு விளக்கு கொண்டுவர முடியும் என மக்களிடம் கேட்டது போல நீட் தேர்வுக்கான விளக்கையும் பெற்று தருவோம்.


ஏற்கனவே ஆளுநர் மாளிகைக்கு தனி தீர்மானத்தை நிறைவேற்றிக் கொடுத்த போது அது அங்கேயே தூங்கிக் கொண்டிருந்தது இந்த பிரச்சனை ஆளுநருக்கு மாநில அரசுக்கு உள்ள ஈகோ பிரச்சனை கிடையாது - இது மருத்துவ கனவில் உள்ள மாணவ மாணவர்களின் பிரச்சினை.


ஒன்றிய அரசு நம்மிடம், நம் பக்கம் இல்லை என்கிற வேதனையும் பாரமும் உள்ளது,ஒன்றிய அரசு நமக்கான ஒன்றிய அரசாக அமையும் பொழுது நாம் என்ன சொல்கிறோமோ அதை காது கொடுத்து அவர்கள் கேட்பார்கள்.


சமீபத்தில் வெளியான சிஏஜி அறிக்ககை என்ன சொல்கிறது என்றால் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு மறை முகமாக அதிமுக அரசு உதவி செய்துள்ளது போல் காட்டுகிறது.


நீட் தேர்வு எழுதச் சென்ற குழந்தைகளின் உடைகள் எப்படி எல்லாம் கிழித்தெறியப்பட்டு, எப்படியெல்லாம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம் - ஆனால் புதிய ஆடைகளை கொடுத்து நீங்கள் அனைவரும் சமம் என்று பள்ளிக்கூடத்திற்கு செல்ல சொல்வதுதான் திராவிட மாடல் அரசு - அவர்களின் மாடல் என்பது, உடைகளை கிழித்தெறியும் மாடலாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | Weather: அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம்.. மக்களே எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ