சென்னை: பூக்கடை காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 11.12.2021 ஆம் தேதி முதல் காணவில்லை. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரில் வீட்டில் கோபித்துக் கொண்டு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களின் புகாரின் பேரில் போலீஸார் சிறுமி காணவில்லை என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், காணாமல் போன சிறுமியை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூசாகலிமுல்லா என்பவர் 14.12.2021 ஆம் தேதி மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தார்.


ALSO READ |  Imprisonment: குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30000 ஆண்டு சிறைதண்டனை!


இதையடுத்து சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது வீட்டை விட்டு வெளியில் சென்ற சிறுமி, மெரினா கடற்கரைக்கு சென்றிருக்கிறார். அப்போது தனியாக சிறுமி நிற்பதைக் கவனித்த, ஆட்டோ டிரைவர் மூசாகலிமுல்லா அவரிடம் அன்பாகவும் ஆறுதலாகவும் பேசியிருக்கிறார். 


அதன்பிறகு சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றியிருக்கிறார். பின்னர், ஆட்டோ டிரைவர் மூசாகலிமுல்லா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி போலீசாரிடம் தெரிவித்தார்.



சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஆட்டோ டிரைவர் மூசாகலிமுல்லாவிடம் விசாரித்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.


ALSO READ |  66 வயது பெண்ணிடம் நடுவிரலை காட்டியதற்காக நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR