கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற பாஜக ஸ்தாபக தின நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் உரையாற்றினார். அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் ஜெயப்பிரகாஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டரை மணியளவில் ஜெயபிரகாஷை கைது செய்ய இரணியலில் உள்ள அவரது வீட்டை நாகர்கோவில் துணை கண்காணிப்பாளர் நவீன்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றிவளைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பாஜகவினர் 50 பேர், ஜெயப்பிரகாஷின் வீட்டை சுற்றி பாதுகாப்பாக நின்றிருக்கிறார்கள். அவரை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது பாஜகவினர் போலீசாரை முற்றுகையிட்டதால் கைது முயற்சி தோல்வியடைந்தது. தொடர்ந்து 4மணி நேரமாக போலீசாரும் பாஜகவினரும் அப்பகுதியில் குவிந்திருந்த நிலையில் பதட்டம் அதிகரித்து போனது. இதனையடுத்து ஜெயபிரகாஷை தாங்களே காவல் நிலையம் அழைத்து வருவதாக பாஜகவினர் தெரிவித்ததை அடுத்து கூட்டம் கலைந்து சென்றது.



இதனையடுத்து விடியற்காலை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஜெயபிரகாஷ் சரணடைந்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் பாஜக நிர்வாகி கைது செய்ய போலீசார் அவரது வீட்டை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR