ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் அந்திரா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் பயணிகள் பேருந்தில் வைத்து திருட்டுத்தனமாக சிலர் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தின் வழியாக ஆந்திரா எல்லையை கடக்கும் அனைத்து பேருந்துகளையும் போலீஸார் சோதனை செய்துள்ளனர்.


அந்த வகையில், குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் மற்றும் லட்சுமணாபுரம் மார்கமாக வந்த பேருதுகளில் சோதனையிட்டபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த  ராமகிருஷ்ணன் மற்றும் மகேஷ் ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 


மேலும் படிக்க | சடலத்துடன் ஓரினச்சேர்க்கை - சைக்கோ வாலிபர் அடித்துக் கொலை..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR