Actor Vijay And Kerala Kid Rishan: விஜய் நடித்து கடந்த செப். 5ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வசூலை குவித்து வரும் திரைப்படம்தான் The Greatest Of All Time (The GOAT). நடிகர் விஜய் 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிர அரசியலுக்கு செல்லும் முன் The GOAT மற்றும் ஒரு படத்தில் மட்டும் நடிக்க இருப்பதாகவும், அதன்பின் சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும் விஜய் அறிவித்திருந்தார். விஜய் தனது கட்சியின் கொடி, பாடல் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியிருந்தார். தற்போது தவெக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில், வரும் செப்.23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தவெக மாநில மாநாட்டை நடத்தவும் நடித்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார். மாநாட்டுக்கு முன் தி கோட் ரிலீஸ் ஆனது என்பதால் இத்திரைப்படம் மீதும் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. 


பெருமூளை வாதத்தால் பாதித்த சிறுவன்


இந்த தி கோட் திரைப்படத்தின் படபிடிப்பு திருவனந்தபுரம் பகுதியில் நடந்தது. அப்போது, திருவனந்தபுரத்தில் ரிஷான் என்ற சிறுவனை, நடிகர் விஜய் சந்தித்தார். சிறுவன் ரிஷான் பெருமூளை வாதம் (Cerebral palsy) நோயால் பாதிக்கப்பட்டவர். ரிஷானை சந்தித்து விஜயை அந்த சிறுவனை கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 


மேலும் படிக்க | திமுக அரசு விஜய்யை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை - எல்.முருகன்!


ரிஷானை விஜய் சந்தித்த பிறகு சிறுவனின் மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் உள்ளதாக அவனின் பெற்றோர் எண்ணினர். எனவே, கேரளாவில் இருந்து சென்னை வந்த அவர்கள் நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்திற்கு வெளியே நின்றுகொண்டு எப்படியாவது விஜயை சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்தனர். சுமார் ஆறு மணி நேரம் நடிகர் விஜய் வருவார், தன் குழந்தையை பார்ப்பார் என நடிகர் விஜய்யின் வீட்டு வாயிலில் ரிஷானின் பெற்றோர் சிறுவனுடன் காத்திருந்தனர்.


விஜய் மீது பெற்றோர் வைத்த நம்பிக்கை 


சென்னை வந்த காரணம் குறித்து ரிஷானின் பெற்றோர் கூறுகையில்,"பல லட்சம் செலவு செய்தும் எங்களது குழந்தைக்கு தீர்வு கிடைக்காத நிலையில், நடிகர் விஜய் சந்தித்த பின்புதான் எங்களது மகன் சுறுசுறுப்பாக செயல்படுகிறான். அவனது நடவடிக்கையில் பெரும் வித்தியாசங்களும் காணப்படுகின்றன. ஆகையால் எவ்வளவு செலவு செய்தும் கிடைக்காத சந்தோஷத்தை நடிகர் விஜய் மூலம் எங்கள் மகனுக்கு கிடைப்பதால், எங்களின் மொத்த குடும்பமும் நடிகர் விஜய்யின் வீட்டு வாயிலில் காத்திருக்கிறோம். ஒருமுறை எங்களுடைய மகனை விஜய் சந்தித்தால் அவன் கொஞ்சமாவது குணமடைவான் என நம்புகிறோம்" என்றனர்.  


குறிப்பாக, வழக்கம் போல் செயல்படும் நடத்தையை விட விஜய்யை கண்டதற்கு பிறகு சிறுவன் ரிஷானின் செயலில் முன்னேற்றம் அடைந்ததாக அவரது தாயும் தந்தையும் கூறுகின்றனர். அவர்கள் விஜய்யை காண்பதற்காக வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் தீடீர் என்று வந்த
விஜய்யின் காரை பார்த்ததும் அந்த சிறுவன் துள்ளிக் குதித்து ஓட முயன்றது அப்பகுதியில் சுற்றி இருந்த அனைவரையும் நெகிழ்சியில் ஆழ்த்தியது.


விஜய்க்கு எழும் கோரிக்கை


அதுமட்டுமின்றி விஜய்யின் பாடலை போட்டால் சிறுவன் ரிஷான் தான் இருக்கும் சேரில் இருந்து எழுந்து ஆடத் துடிப்பதும் பலரது கண்களை கலங்கச் செய்தது. விஜய் வந்த கார் நிற்காமல் உள்ளே சென்றதால் ரிஷான் மற்றும் அவர் குடும்பத்தார் ஏக்கத்திற்கு ஆளாகினர். ரிஷானை விஜய் சந்தித்திருந்தால், அவன் சந்தோசத்தில் துள்ளிக் குதித்திருப்பான். ஆனால், தற்போது ரிஷானும் அவரது குடும்பமும் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த விஷயம் விஜய் காதுக்கு எட்டியது என்றால் நிச்சயம் ரிஷானை சந்திக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது. 


மேலும் படிக்க | GOAT படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனம்!! வெங்கட் பிரபு சொன்ன பதில் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ