தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கிய நிலையில் தொடர்ந்து நிலவி வரும் கிழக்கு திசைக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் தமிழகத்தில் (Tamil Nadu) பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு (Heavy Rain) ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., மாலத்தீவு பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | Sadhguru: இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தமிழகத்தில் முன்னெடுக்க வேண்டும்


மேலும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரும் 19 ஆம் தேதி முதல் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR