தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் ( Chennai Meteorological Department) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில்  (Tamil Nadu), வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சேலம், கோவை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி,  தேனி, திண்டுக்கல், ஈரோடும், மதிரை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


மேலும் ஏனைய பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை (TN Rain) )பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ALSO READ | கொரோனா ஒழியவில்லை; மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்


இதனால், மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஜூன் 4 (இன்று) முதல் வரும் 8ம் தேதி வரை, தென் மேற்கு, மத்திய மேற்கு, அரபி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில், பலத்த காற்று  வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


ALSO READ | செய்தியாளர், ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி தடுப்பூசி முகாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR