TN Weather: அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: IMD

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 18, 2021, 06:59 PM IST
  • தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.
  • வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
  • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
TN Weather: அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: IMD title=

Tamil Nadu Weather: தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களிலும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் (Tamil Nadu) மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரியில் ஏற்கனவே மழை பெய்து வரும் நிலையில், அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் நேற்று கூறியது. கடந்த 24 மணிநேரத்தில் மேல்பவானியில் 22 செமீ மழை பதிவாகியுள்ளது. கன மழை பெய்து வரும் கூடலூரில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

தென்மேற்குப் பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் (IMD) இன்றும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் கனமான மழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ALSO READ: Chennai: இந்திய பெருங்கடலில் எண்ணெய்க் கசிவு; கண்காணிப்பு தீவிரம் - ICG

இது தவிர, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளிலும் புதுச்சேரியில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூட்டிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

21 மற்றும் 22 ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் (Chennai) அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தென்மேற்ககுப் பருவ மழை காரணமாகவும், வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும், ஜூன் 22 ஆம் தேதி வரை மீனவர்கள் ஆந்திரா, கேரளா மற்றும் வடக்கு அந்தமான் கடலோர பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News