காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற வரதராஜா பெருமாள் கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று சாமி ஊர்வலத்தின்போது, பாடல்கள் இசைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது சமஸ்கிருத பாடல்களை பாடுவதா, தமிழ் பாடலை பாடுவதா என்பது தொடர்பாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் திருவிழா ஊர்வலத்தில் இருதரப்பிடையே மோதலால் பரபரப்பு  ஏற்பட்டது. சாமி ஊர்வலத்தில் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் பாடல் இசைப்பது தொடர்பாக இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


வட கலை மற்றும் தென் கலை பிரிவு பக்தர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.