கோவை ஈஷா நிறுவனர் சத்குரு இப்போது டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக அவருக்கு கடுமையான தலைவலி இருந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, இப்போது அவர் நலமாக இருக்கிறார். சத்குருவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்த டெல்லி தனியார் மருத்துவமனையின் நியூராலஜிசிஸ்ட் வினித் சூரி பேசும்போது, " சத்குருவுக்கு கடந்த சில வாரங்களாக தலைவலி இருந்துள்ளது. அவரது தலையை ஸ்கேன் செய்ததில் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ததால் இப்போது சத்குரு நலமாக இருக்கிறார்." என தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL போட்டி நடைபெறுவதையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்!



மேலும், சத்குரு இப்போது நாங்கள் கொடுக்கும் மருத்துவ சிகிச்சைகளைக் கடந்து தன்னை தானே குணப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றும் மருத்துவர் வினித் சூரி தெரிவித்தார். இது குறித்து ஈஷா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சத்குருவுக்கு கடந்த சில வாரங்களாகவே தலைவலி இருந்தது. இருந்தபோதும் அவர் ஈஷா மகா சிவராத்திரி விழாவிலும், டெல்லியில் இருந்த மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார். சில நாட்களுக்கு முன்பு சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.  அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளது."


சூழ்நிலைகள்  கடுமையாக   இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார் என்றும் ஈஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் மருத்துவர்கள் அவரை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். சத்குரு உடல்நிலை குறித்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மருத்துவமனையில் படுக்கையில் இருந்தவாறே பேசும் சத்குரு, மருத்துவர்கள் என்னுடைய தலையில் ஆப்ரேஷன் செய்து எதையோ தேடியிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால், மீண்டும் தலையை பத்துபோட்டு சரிசெய்திருக்கிறார்கள் என கூறியுள்ளார். மேலும், தான் நன்றாக இருப்பதாகவும், யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் சத்குரு.



அண்மையில் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட சிவராத்திரி விழாவில் சத்குருவுடன் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் இருந்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் எல்லாம் கலந்து கொண்டு சிவராத்திரி விழாவை கொண்டாடினர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | IPL 2024: சென்னை அணியில் இணைந்த இரண்டு முக்கிய வீரர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ