திமுகவுக்கு எதிராக வரும் 25 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக் கூட்டம்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் திமுகவும் காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை விளக்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   


சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 


இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழர்களுக்கு செய்த துரோகத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.