கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் சுப. வீரபாண்டியன், ஓவியா மற்றும் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பல்கலைக்கழகத்துக்கு சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | சேலத்துக்கு வந்தது ஒமிக்ரான்! பாதிக்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் அனுமதி!


தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் எம்.ஆர்.காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். கள்ளச்சாராயம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் எல்லாம் தமிழக அமைச்சர்களாக இருப்பதாக சாடினார். மேலும், பெரியார் குறித்தும் விமர்சனம் செய்த அவரை, போராட்டத்துக்குப்பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை மற்றும் திராவிடர் அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்களை தரக்குறைவாக விமர்ச்சிக்கும் ஹெச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


பின்னர் பேசிய அந்த அமைப்பினர், சமூகத்தில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஹெச்.ராஜா கூறி வருவதாக தெரிவித்தனர். தமிழக அமைச்சர்களை கடுமையாகவும், கொச்சையாகவும் ஹெச்.ராஜா பேசுவதாக தெரிவித்த அவர்கள், தமிழக முதலமைச்சர், இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


ALSO READ | Crime: சந்தேக விஷத்தின் வீபரீத விளைவு! மனைவியை கொன்ற கணவன் தலைமறைவு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR