Crime: சந்தேக விஷத்தின் வீபரீத விளைவு! மனைவியை கொன்ற கணவன் தலைமறைவு!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2021, 09:36 AM IST
Crime: சந்தேக விஷத்தின் வீபரீத விளைவு! மனைவியை கொன்ற கணவன் தலைமறைவு!  title=

சென்னை: குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் வாழ்க்கையையே பாழாக்கிவிடும் என்பதற்கான உதாரணங்களை தினம் தினம் பார்க்க முடிகிறது. அதற்கு அண்மை உதாரணமாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவன் தலைமறைவாகிவிட்டார்.

சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பூந்தமல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மனைவி வாணி மற்றும் கௌதம், ஹரிஷ் என்ற 2 மகன்களுடன் வசித்துவந்தார்.

குடிப்பழக்கம் இருந்த ரமேசுக்கும் மனைவி வாணிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். அதோடு, கூடுதலாக வாணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்தி (Domestic Violence) வந்துள்ளார் ரமேஷ்.

இரு நாட்களுக்கு முன்னதாக தம்பதிகளுக்கு ஏற்பட்ட நிலையில், ரமேஷ் தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது மூத்த மகன் கௌதம் அம்மா எங்கே என்று கேட்டிருக்கிறார். அதற்கு அம்மா வேறு ஒருவருடன் ஓடிப் போய் விட்டார்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் ரமேஷ்.

நேற்று முழுவதும் வாணியின் மகன்கள் தனது தாயை தேடி உள்ளனர். தந்தை வீட்டிற்கு வரவில்லை  என உறவினர்களிடமும் தெரிவித்துள்ளனர். 

READ ALSO | அதிகமான ஆண் நண்பர்கள்..காட்டிக்கொடுத்த கால் ரேகை

அன்று இரவு வீட்டில் கௌதம், ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் மட்டுமே இருந்துள்ளனர்.  அப்போது டிவியின் அடியிலுள்ள டேபிள் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறியது. மேலும் லேசான துர்நாற்றமும் வீசவே உடனடியாக இதுகுறித்து வீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள  வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். 

அவர் மேலே வந்து பார்த்த போது துர்நாற்றம் வீசியதால் உடனடியாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த ஓட்டேரி போலீசார் டிவி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் டேபிள் அடியில் இருந்த துணி மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் முகத்தில் பலத்த காயங்களுடன் வாணி இறந்து கிடப்பதை கண்டனர்.

உடனடியாக வாணியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியின் கணவர் ரமேஷை தேடி வருகின்றனர்.

ALSO READ | மனைவியின் பெயரை நாய்க்கு வைத்ததால் பக்கத்து வீட்டு பெண்ணை எரித்த நபர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News