Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 857 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை  6,94,030 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 191,806 ஆக உயர்வு. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,741 ஆக உயர்ந்தது.


அதேநேரத்தில் இன்று 4,403 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 6,46,555 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 36,734 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இன்று 80,371 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 91,12,067* பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


இன்றைய நிலவரம்: 20-10-2020


கொரோனா பாதிப்பு - 3,094 
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 36,734 
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 80,371 
குணமடைந்து வெளியேறியவர்கள் -  4,403 
இறப்பு - 50


ALSO READ | டிரைவர் இல்லாமல் ஓடும் கார்... நெட்டிசன்களை குழப்பும் வைரல் வீடியோ..!



 



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR