கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அவரிடம் விசாரித்த போது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின் தந்தை பழைய
வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானவேல் (வயது 45) பொம்மை செய்யும் தொழிலாளியாக இருந்து வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!


இன்று அதிகாலை ஞானவேலுக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிக்குரிய செய்தி அறிந்த அவரது மகள் கிரிஜா இன்று பிளஸ் 2 கடைசி தேர்வு என்பதால் தனது தந்தை இறந்ததை தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு நேரில் வந்து தேர்வு எழுதி உள்ளார்.  



இந்த சம்பவத்தால் பள்ளி மற்றும் ஊர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூரில் பள்ளி மாணவி தனது தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.


மேலும் படிக்க | மதுரை மாநகராட்சி மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் ஆர்பாட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ