சென்னை, அயனவரத்தை சேர்ந்தவர் கிருபாநிதி. இவருக்கு வயது 20 ஆகும். இவர் ஒரு ரௌடியாவார். அதன்படி இவர் இன்று காலை, குடிபோதையில், தனது நண்பரான ஓட்டேரியை சேர்ந்த, பிரேம்குமார் (20) என்பவருடன், இருசக்கர வாகனத்தில், கொன்னுார் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது, நம்மாழ்வார்பேட்டை அருகில், சாலையில் தாறுமாறாக ஓடிய இருசக்கர வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. பின், எதிர்புறமாக வந்த முதியவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.


ALSO READ | கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு - ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி


இந்த விபத்தில் காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் விசாரணை மேற்கொண்டனர்.


இந்த விசாரணையில், விபத்தில் இறந்தவர் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த சண்முகம் (61) என்பது தெரியவந்தது. மேலும் இவர் பழ வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த விபத்தை ஏற்படுத்திய ரௌடி கிருபாநிதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கிருபாநிதி மீது, அண்ணா நகர் உட்பட சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR