கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு - ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஈரோட்டில் கெமிக்கல் நிறுவனத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவில் ஒருவர் உயிரிழந்தார், 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 11, 2021, 06:21 PM IST
கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு - ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி title=

ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியை அடுத்த ராயப்பாளையம் பகுதியில் ஸ்ரீதர் கெமிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் இருக்கும் குளோரின் கேஸ் குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தாமோதரன், சரிசெய்ய முற்பட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கேஸ் லீக்கானதில், தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்

மேலும், கேஸ் லீக்கானதில் அக்கம்பக்கத்தினர் மற்றும் நிறுவனத்தில் பணியாற்றிவர்கள் என மொத்தம் 13 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மொத்தம் 4 வாகனங்களில் கெமிக்கல் நிறுவனத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர், கேஸ் லீக்கை சரிசெய்யும் பணியை மேற்கொண்டர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுன்னி, உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.

ALSO READ | சட்டை இறுக்கமாக அணிந்ததற்காக அடித்த ஆசிரியர் - மருத்துவமனையில் மாணவன்

மேலும், கேஸ் லீக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அதிகாரிகளை அறிவுறுத்திய அவர், மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசி மோகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்ப இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கெமிக்கல் நிறுவனர் உரிமையாளர் உயிரிழந்ததும், கேஸ் லீக்கால் ஊழியர்களும், அக்கம்பக்கத்தினரும் பாதிக்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News