சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.45 அடியாக உள்ள நிலையில், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து  வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கயாக, மழை பெய்யும் அளவை பொறுத்து, உபரி நீர்,  ஏரியிலிருந்து  வெளியேற்றப்பட உள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


எனவே பொதுமக்கள்  தங்கள் உடமைகள் மற்றும் ஆவணங்களை பத்திரப்படுத்தி கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


ALSO READ | சென்னையில் மேலும் இரு நாட்களுக்கு கன மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்


ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும், கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதியில் வாழும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி முகாமகளில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளனர்.


சென்னையில் இரவு முதல் கனமழை எதிரொலியாக கூவம் அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுள்ளது. சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் இரவு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


சென்னை நகரில் பல சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை மாநகர முழுவதுமே இருசக்கர வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. மக்களின் நடமாட்டம் குறைத்து பல சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது. மின்சார சேவையும் அங்கங்கே பாதிப்புக்குள்ளாகி உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்கும் புகுத்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


ALSO READ | சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR