சென்னை: ஆந்திராவின் காக்கிநாடா அருகே ஏற்பட 5.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்ப்பு மையம் அறிவித்துள்ளது.


சென்னையில் கடலை ஒட்டிய சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் (Earthquake) லேசாக உணரப்பட்டது. 


சென்னை, விசாகப்பட்டினம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் கடற்கரை பகுதிகளில் லேசான தாக்கம் ஏற்பட்டுள்ளது.



ALSO READ: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்


சென்னையைப் (Chennai) பொறுத்தவரை, ஆழ்வார்பேட்டை, திருவெல்லிக்கேணி, பெசண்ட் நகர் போன்ற பகுதிகளின் லேசாந நில அதிவு உணரப்பட்டது.


வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன. 12:35 மணியளவில், நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையில் உணரப்பட்டது.


கடல் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்ப்பு மையம் தெரிவித்துள்ளது. 


வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி தாக்கக்கூடுமோ என்ற அச்சமும் பரவத் தொடங்கியுள்ளது. எனினும், அதற்கான எந்த வித எச்சரிக்கையும் இன்னும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பொதுவாக, 6-க்கு மேலான ரிக்டர் அளவுகளைக் கொண்டுள்ள நிலநடுக்கங்களே அதிகமாக உணரப்படுகின்றன, அவற்றின் தாக்கம் தான் அதிகமாக இருக்கும். அவற்றால் பாதிப்புகளுக்கான சாத்தியக்கூறுகளும் அதிகம் இருக்கும். இன்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் அளவு 5.1 ஆக இருப்பதால், அதிக அச்சம் கொள்ள தேவையில்லை என நிபுணர்கள் கருதுகிறார்கள்.    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ALSO READ: கல்லூரிகள் திறப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR