புதுடெல்லி: இன்று துபாய் நகரில் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை பல்வேறு தொழில் நிறுவனத்தினர் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட விருப்பம் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தமிழகத்தில் இருந்து முதலில் இங்கிலாந்து சென்றார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர், தற்போது துபாயில் உள்ளார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 15 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அந்தந்த நாட்டின் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்ப்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.


இன்று துபாயில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குழு, அங்கு பல்வேறு தொழில் நிறுவனத்தினரை சந்தித்து பேசினார். மேலும் தொழில் முதலீட்டாளர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிச்சாமி உரையாற்றினார். 


 



அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 


துபாயில் ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் வணிகத் தலைவர்கள் மன்றமும், இந்திய துணை தூதரகமும் இணைந்து நடத்திய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் தொழில் துவங்கிட முதல்வர் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


 



துபாய் நகரில் பல்வேறு தொழில் நிறுவனத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட விருப்பம் தெரிவித்தனர்.