பள்ளி மாணவர்களை போலவே அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவச மடிக்கணினி திட்டம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர், பங்கேற்று, ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர். விருதுடன் சேர்த்து ஆசிரியர்களுக்கு, பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் வெள்ளிப் பதக்கமும், வழங்கப்பட்டன. 


விழாவில் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்; முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மேலும், மத்திய அரசு நிதியுதவியுடன் அரசு பள்ளிகளுக்கு 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படும். கூட்டு முயற்சியோடு ஆசிரியர்கள் பணிகளை மேற்கொண்டால் பின்லாந்தைவிட தமிழகம் கல்வியில் முன்னோடியாக திகழும் என்றார்.