கஜா புயல் நிவாரண பணிகள் குறித்த விளக்கம் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 


கஜா புயல் பாதிப்புகள் குறித்து இறுதி அறிக்கை தயாரிப்பதற்கு முன்னதாக கேட்ட சில சந்தேகங்களுக்கு தமிழக அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 


இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரண், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகள் சேதம், இழப்பு குறித்து சரியான ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


இதையடுத்து, கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணப் பணிகள், தமிழக அரசின் தேவைகள் குறித்த முழு விபரங்களையும், தாமே பிரதமரிடம் நேரில் அளித்த தாக கூறினார். ஆனாலும் தற்போது மத்திய அரசு கேட்டுக் கொண்ட கூடுதல் விபரங்கள் உடனடியாக தரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக மற்றும் மத்திய அரசுகளிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், கர்நாடக அரசு காவிரியில் பல  அணைகள் கட்டியதால் தமிழகம் பாலைவனமாகி விட்டது என்றார். 5 மாநில தேர்தல்களில் மாநில பிரச்சனைகள் முன்வைத்து மக்கள் வாக்களித்து உள்ளனர் என்றார்.