சென்னை: போலி கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் மூலம் நூதன பண மோசடி செய்து வந்த ஊர்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். 32 வயதான இவர், தனது வீட்டின் முன் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை ஆன்-லைன் மூலம் அனுப்ப ‘கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை’ கடையில் ஒட்டி இருந்தார். கடந்த சில தினங்களாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ‘கியூ.ஆர்.கோடு’ மூலம் பணம் பரிமாற்றம் ஆகவில்லை. அதில் மோசடி நடந்து உள்ளதாக அவர் சந்தேகப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது கடையில் உள்ள ‘கியூ.ஆர்.கோடு’ ஸ்டிக்கருக்கு பதிலாக போலியாக வேறொரு ‘கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை’ ஒட்டி உள்ளதாகவும், அதனால் தனக்கு ரூ.3 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் கண்ணகி நகர் போலீசில் ஆனந்த் புகார் அளித்தார்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி பள்ளியில் ஆவணங்களை தீ வைத்து கொளுத்திய நபர் கைது


இது குறித்து சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது, கண்ணகி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் (21) என்பதும், இவர் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றுவதும் தெரிந்தது.



இவர், கடைகளில் உள்ள ‘கியூ.ஆர்.கோடு’ ஸ்டிக்கருக்கு மேல் தனது வங்கி கணக்கிற்கு பணம் செல்லும் வகையில் போலியான ‘கியூ.ஆர்.கோடு’ ஸ்டிக்கரை ஒட்டி பண மோசடி செய்ததையும் ஒப்புக்கொண்டார்.



மேலும் சென்னை மாநகர காவல்துறையில் போலீஸ்காரராக பணியாற்றுவது போல் போலியான அடையாள அட்டையும் வைத்து இருந்தார். இவ்வாறு அடையாறு போலீஸ் நிலைய பகுதிகளில் உள்ள 7 கடைகளில் போலி ‘கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை’ ஒட்டி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


மேலும் படிக்க | தற்கொலைப் படை தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீர மரணம்


கண்ணகி நகர் போலீசார் ஸ்ரீதரை கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஏராளமான ‘கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர்கள்’, போலி அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.


உள்ளூர் காவல்படையில் பணிபுரியும் இவர் செய்திருக்கும் மோசடி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீதரிடம் மேலும் விசாரணை நடத்தி வேறு மோசடிகள் தொடர்பாகவும் தகவல்கள் கிடைக்கிறதா என்று போலீசார் முயன்று வருகின்றனர்.


மேலும் படிக்க | கலவரத்தில் எடுத்து சென்ற பொருட்களை சாலையோரம் வீசி சென்ற பொதுமக்கள்


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி வீடியோக்களை வலைதளத்தில் பதிவிட்டால் நடவடிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ