தூத்துக்குடி அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் ஜோடி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த சோலைராஜ் மற்றும் கல்லாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி, இருவரும் காதலித்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு பிரிவினர் என்பதால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த இரு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால், எதிர்ப்பை மீறி மூன்று மாதங்களுக்கு முன்பு சோலைராஜ், ஜோதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் பெண் வீட்டின் சார்பில் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மிரட்டல்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த்தில் ஜோதி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். 



இந்நிலையில், நேற்று காலை குளத்தூரில் தனியே வசித்து வந்த இருவரும் வீட்டு வாசலில் படுத்துறங்கிய போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக குளத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்ததால் இளம் தம்பதியர் ஆணவக் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையில் பெண்ணின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார்.