சேலம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வெங்கடேசன் கடந்த 3 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்காவில் பணியாற்றி வந்தபோது விஜயலட்சுமிக்கும் அவரது சகோதரியின் கணவரான குமரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் குமரனின் மனைவி சரஸ்வதி அவரை பிரிந்து சென்றுவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே, வெளிநாட்டில் இருந்து வெங்கடேசன் அனுப்பி வைக்கும் பணத்தில் விஜயலட்சுமியும், குமரனும் ஆடம்பரமாகவும், உல்லாசமாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய வெங்கடேசன் மனைவின் ஆடம்பரமான பகட்டு வாழ்க்கையை கண்டு அவர் மீது சந்தேகமடைந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 



ஒருகட்டத்தில் கணவனின் தொல்லை தாங்க முடியாத விஜயலட்சுமி வெங்கடேசனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக கள்ளக்காதலன் குமரனுடன் சேர்ந்து வெங்கடேசனை வீட்டில் வைத்து அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. மேலும் உயிரிழந்த வெங்கடேசனின் கை, கால்களை கட்டி அவரின் உடலை சாக்குமூட்டையில் அடைத்து மிட்டாய்புதூர் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். 



தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த புகாரில் விஜயலட்சுமியையும், அவருக்கு உடந்தையாக இருந்த குமரனையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR