வரும் 2019-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொங்கள் பண்டிகையினை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு 3 இடங்களில் நடத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையினை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.


அதன்படி, வருகிற 2019 ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ஆம் தேதி பாலமேட்டிலும், ஜன 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழர் திருநாளாம் பொங்கள் திருநாளில், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இப்போட்டிகளில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலரும் பங்கேற்பர். இந்நிலையில் இப்போட்டிகளுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.