கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடந்த கொலை கொள்ளை இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உண்மைக் குற்றவாளிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள என இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களில் மக்களிடம் வாக்குறுதியாகவே கொடுத்துள்ளார். அந்த வழக்கு விசாரணை இப்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!


இந்த சம்பவம் நடந்தபோது அதிமுக ஆட்சி தான் இருந்தது. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தான் இருந்தார். இருப்பினும் இந்த வழக்கு விசாரணை அப்போது முறையாக நடைபெறவில்லை என திமுக தரப்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்கு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியது. இந்த நேரத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.


அவர்களின் இந்த வலியுறுத்தல் இப்போது அடுத்தக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அதாவது கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், இதனை சிபிஐ விசாரணைகோரி அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை திசை திருப்பவே கனகராஜ் ஜெயலலிதாவின் டிரைவர் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்வதாக தெரிவித்தார். 


மேலும் இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும், தமிழக அரசு எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் விசாரிக்காதது ஏன்? எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே என்ன அண்டர்ஸ்டாண்டிங்? எனவும் கேள்வி எழுப்பினார் அவர். முதலமைச்சரின் நடவடிக்கையால் திமுக தொண்டர்களே தலையில் அடித்துக் கொள்கிறார்கள் என்றும் புகழேந்தி விமர்சித்தார்.


மேலும், எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்ததால் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை போச்சு எனவும், இது பாஜக பண்ண கூத்து எனவும் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக எங்களது கட்சி, தேர்தல் ஆணையம் சொல்லட்டும் அதிமுக யாருடையது என என்று கூறியிருக்கும் அவர், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை, சிபிஐ-யை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | உண்டியலில் ரூ.100 கோடி செக்! சாமிக்கே அல்வா கொடுத்த பக்தர்-அதிர்ந்து போன அர்ச்சகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ