தருமபுரியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரின் மனைவி ராதா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை அம்மன் குளம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். கட்டட வேலைக்கு செல்லும் அவர், நேற்று மாலை வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அப்பகுதியில் இருக்கும் மளிகைக் கடையில் பால் வாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்து சென்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | பதறவைத்த இரட்டைக்கொலை, பதிலாய் வந்த என்கவுண்டர்: செங்கல்பட்டில் பரபரப்பு


மாலை நேரம் இருட்டாக இருந்த சமயத்தில், அப்பகுதியில் ஏற்கனவே மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் ராதா மீது ஆசிட் வீசி விட்டு தப்பியோடியுள்ளார். இதில், ராதாவின் இடது முகம் மற்றும் தோள்பட்டை, கை, கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால், அலறிய ராதாவை மீட்டு அப்பகுதியில் இருந்த மக்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற பந்தயசாலை காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


ALSO READ | கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன?
  
ஆசிட் வீச்சுக்கான காரணம் என்பது குறித்து முதலில் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். குடும்ப பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி காரணம் இருக்கிறதா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள மர்ம நபரை பிடிக்கும் நோக்கில், ஆசிட் வீசப்பட்ட பகுதியில் இருக்கும் சிசிடிவிக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து, அதனடிப்படையில் குற்றவாளியை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR