கனமழை குறித்த அப்டேட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு

Mon, 14 Oct 2024-11:46 am,

Heavy Rain Alert Tamil Nadu News: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather Latest Update: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு அரபி கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகவும், வங்க கடலில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு.

Latest Updates

  • காவல் ஆணையர் உத்தரவு

    தண்ணீர் அதிகமாக தேங்கும் இடங்களில்50 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். 

  • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

    சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்.

  • முதல்வர் ஆலோசனை

    நாளை அல்லது நாளை மறுநாள் கனமழை பெய்ய உள்ள நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறார்.

  • 12 செ.மீ மழை பெய்யும்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அக்டோபர் 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் 6 செ.மீ முதல் 12 செ.மீ மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.

  • கோவையில் மழை

    கோவை மாநகரில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர்  தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

  • பள்ளிகளுக்கு விடுமுறையா?

    "மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

  • மதுரை, தேனியிலும் மழை

    அடுத்த வரும் 24 மணி நேரத்துக்குள் தஞ்சை, திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

  • உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    தென்கிழக்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து. வடதமிழகம், தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கிறது. மாலை முதல் மழையின் அளவு அதிகரிக்க துவங்கும்.

  • சென்னையில் நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை; அதனால் எந்த சுரங்கப்பாதையும் முடப்படவில்லை - சென்னை மாநகராட்சி தகவல்

  • தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு.

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு இருப்பதால், வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

  • கனமழை குறித்த அப்டேட்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவிற்கு வரவிருக்கும் கனமழை குறித்த அப்டேட் தந்த தமிழ்நாடு வெதர்மேன். 

     

  • மிக கனமழை எச்சரிக்கை - தமிழ்நாடு அரசு உத்தரவு 

    தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு

  • சென்னை மழை - சென்னை மாநகராட்சி

    சென்னையில் நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில்m எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை. அதனால் எந்த சுரங்கப்பாதையும் முடப்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

  • தமிழகத்தில் இன்று முதல் 16ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில், 17, 18, 19ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.

  • காற்றழுத்த தாழ்வு பகுதி 15, 16-ம் தேதிகளில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும்.

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link