கோவையில் தாயும் மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை துடியலூர்  அடுத்துள்ள அப்பநாயக்கன் பாளையம்  பகுதியில் வசித்து வந்தவர்   தனலட்சுமி. இவரது கணவர் திருமூர்த்தி கடந்த 11 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். 53 வயதான தனலட்சுமிக்கு  சசிகுமார் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் உள்ளனர். சசிக்குமார் திருமணம் செய்து சரவணம்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். 


மாற்றுதிறனாளியான சுகன்யா   மனநலம் பாதிக்கப்பட்டு தாயுடனே இருந்து வந்துள்ளார். . இந்நிலையில்  நேற்று முன் தினம் தனலட்சுமி  தனது மகனுக்கு போன் செய்து தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக மகனிடம் போன் செய்து கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை சசிக்குமார் தனது அம்மாவிற்கு போன் செய்த போது, அவர் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனடியாக பக்கத்து வீட்டுகாரருக்கு போன் செய்து அம்மாவை பேச சொல்லியுள்ளார். பக்கத்து வீட்டுகாரர்கள் தனலட்சுமி வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கேட் மற்றும் முன்கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது, வீட்டினுள் தனலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 


ALSO READ | கொழுந்தனை பிரிய மனம் இல்லாததால் அண்ணி தற்கொலை: ஏற்காட்டில் நடந்த விபரீதம்


உடனடியாக சசிக்குமார் மற்றும் துடியலூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி ராஜபாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தபோது, மாற்றுதிறநாளி சுகன்யா விஷம் குடித்து, தாய் தனலட்சுமி தூக்குபோட்டும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இறந்த இரு உடலையும் கைப்பற்றிய போலீசார் (TN Police) பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


ALSO READ | ஐந்து வயது பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 10 வயது சிறுவர்கள்


இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தாயும் மகளும் இறந்த இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | கத்தியை காட்டி துணிகர கொள்ளை: 75 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்துடன் தப்பித்த கும்பல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR