ஐந்து வயது பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 10 வயது சிறுவர்கள்

ஐந்து வயது பெண்குழந்தைக்கு,  3 மாதமாக 10 வயது சிறுவர்கள், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 6, 2022, 09:52 AM IST
ஐந்து வயது பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 10 வயது சிறுவர்கள் title=

தஞ்சாவூர் தொம்பன் குடிசை அருகே, சோழன் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எலக்ட்ரிஷன். இவரது மனைவி நூர்முகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எல்ஐசி ஏஜென்ட். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 10 மற்றும் 11 வயதுடைய,  இரண்டு சிறுவர்கள் அந்த பெண் குழந்தைக்கு கடந்த 3 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாய் நூர்முகமது குற்றம் சாட்டுகிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 3 மாதமாக அந்த இரண்டு சிறுவர்களும், எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். தற்போது தான் தனக்கு இது தெரிய வந்ததாகவும், ஆனால் தனது மகள் கடந்த 3 மாதமாக அவளின் பெண்ணுறுப்பு வலிப்பதாக என்னிடம் கூறினார். ஆனால் நான் விளையாட்டு பிள்ளை கீழே விழுந்து அடிபட்டு இருக்கும் என்று அலட்சியமாக இருந்ததாகவும், ஆனால் தனது மகன் இதனை நேரில் கண்டு அவனது தங்கையை அடித்ததாகவும்,  அப்போது விசாரித்த போது நடந்த சம்பவத்தை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தாகவும் கூறுகிறார்.

ALSO READ | பெண்களை குறிவைத்து மோசடி செய்த ’கில்லாடி’ கொள்ளையன் கைது..!

இது குறித்து அந்த சிறுவர்களின் பெற்றோரிடம் கூறிய போது,  உள்ளூர் அரசியல் பிரமுகர்களை வைத்துக் கொண்டு தன்னையும், தனது கணவனையும் மிரட்டியதாகவும், மேலும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல், தன்னை கேவலமாக நடத்தியதாகவும், சமாதானமாகப் போகும்படி அறிவுறுத்துகின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு உரிய நியாயம் வேண்டும், அந்த சிறுவர்கள் மீது  வழக்குப்பதிவு செய்து, சிறுவர்கள் காப்பகத்தில் அடைக்க வேண்டும். இந்த வயதில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் போது, அவர்கள் வளர்ந்து சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் எனவே அவர்களை சிறுவர் காப்பகத்தில் வைத்து உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைக்கிறார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ALSO READ | தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News