ஓசூர் அண்ணாநகரில் தாய் - மகள் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஓசூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓசூர் அண்ணாநகர் ஜெய்சங்கர் காலனியில் வசித்து வருபவர் மெக்கானிக் மகபூப்பாஷா. இவர் பேரண்டபள்ளி என்ற இடத்தில் எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நூர்ஜான் (38), மகள் மோசின்ஜான் (17). 


10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள மோசின்ஜான் கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று படித்து வந்துள்ளார். 



மகபூப்பாஷா நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில், நூர்ஜானும் அவரது மகள் மோசின்ஜானும்  வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை (Suicide) செய்து கொண்டுள்ளனர். 


ALSO READ | ஐந்து வயது பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 10 வயது சிறுவர்கள்


இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஒசூர் நகர காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் (TN Police) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் மகள் இருவரும் தூக்குப்போட்டு உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | கத்தியை காட்டி துணிகர கொள்ளை: 75 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்துடன் தப்பித்த கும்பல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR