தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 3 வது நாளாக விசாரணையை தொடர்கிறது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். 


அதில், 13 பேரில் 4 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் என்றும், இந்நிலையில் பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.


முன்னதாக, உயிரிழந்தோரின் குடும்பத்தினர், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், முன்னாள் காவல் கண்காணிப்பாளரிடம், ஆணையத் தலைவர் முருகன் விசாரணை நடத்தினர். அந்த வகையில், 3 வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது!